
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.07, 2016 (07/10/2016)
தமிழகத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பேரில் “MEDIPARK”
“மேக் இன் இந்தியா” – வின் படி, மத்திய அமைச்சரவை மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு பிரிவு ஒன்றை, தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
எச்எல்எல் லைப்கேர் லிமிடெட் (HLL Lifecare Ltd). தமிழ்நாடு அரசுடன் இந்த திட்டத்தின் பங்குதாரர் ஆகியுள்ளது.
இந்த திட்டம் பற்றி:
இந்த திட்டம், ஒரு குறைந்த செலவில் அதிக திறன் பொருட்கள் தயாரிக்கும் உள்ளூர் உற்பத்தி பிரிவுகளை ஊக்குவிக்கவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய மலிவு விலையில் மருத்துவ சாதனங்கள் கிடைக்கவும் இது வழிவகை செய்கிறது.
இது உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையை குறைக்கவும் வழிவகை செய்கிறது.
உலக நிலையான வளர்ச்சி மாநாடு
புது தில்லியில் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) ஏற்பாடு செய்த உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டின் (World Sustainable Development Summit) முதல் பதிப்பிணை இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.
உச்சி மாநாட்டின் கரு : ‘2015 – க்கு அப்பால் : மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம்’
புதியதாக சூரிய சக்தியினால் இயங்கும் சரக்கு ரயில்
புதியதாக சூரிய சக்தியினால் இயங்கும் சரக்கு ரயில் தில்லியின் சப்தர்ஜங் இரயில் நிலையத்தில் தனது இரயில் சேவையை தொடங்கியது.
இந்த ரயில் பற்றி:
இந்த ரயில் (8 சக்கர) சூரிய சக்தியில் இயங்கும் லைட், மின்விசிறி, மொபைல் சார்ஜ் செய்ய வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வெளியேற்றம் இல்லாமல் உயிரியல் கழிவறை வசதியும் செய்துள்ளது.
வெளியுறவுக் கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்
மோடியின் வெளியுறவு கொள்கையில் மிடாஸ் டச் என்ற தலைப்பிலான புத்தகம், வெங்கையா நாயுடு, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரியினால் வெளியிடப்பட்டது.
தூதர் சுரேந்திர குமார் இப்புத்தகத்தினை எழுதி உள்ளார்.
இந்த புத்தகம் பற்றி:
இந்த புத்தகம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமரின் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் ஏற்படும் முன்னேற்றதினை முக்கிய மேற்கொள்கின்றன.
அது மேலும் ஒரு வலுவான பொருளாதார அபிவிருத்தி நாடாக வெவ்வேறு கொள்கை முயற்சிகள் மூலம் இந்தியா வளர கவனம் செலுத்துவதை மேற்கோள்காட்டுகிறது.
நோபல் அமைதி பரிசு 2016
கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ், நாட்டின் 50 க்கும் மேற்பட்ட வருட கால உள்நாட்டு யுத்தத்துக்கு தனது முயற்சிகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு 2016 அவருக்கு வழங்கப்பட்டது.
இது முதல் முறையாக 1992லிருந்து, லத்தீன் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதான பரிசு ஆகும். இதற்குமுன் மனித உரிமை ஆர்வலர் கவுதமாலா Rigoberta Menchu பரிசு பெற்றிருக்கிறார்.
ராணி கி வாவ் (rani ki VAV) – சுத்தமான இடம்
குஜராத்தில் உள்ள ராணி கி வாவ், உலக பாரம்பரிய தளம், புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்திய சுகாதார மாநாடு (INDOSAN) 2016- இல் இந்தியாவில் சுத்தமான சின்னமான இடத்தில் இது உள்ளது என அறிவிக்கப்பட்டது.
நிலையான வளர்ச்சியின் தலைமை விருது 2016
சிக்கிம் முதல்வரான பவன் சாம்லிங், தனது தலைமையின் மூலம் சூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி மூலம் நாட்டின் முதல் மற்றும் ஒரே கரிம மாநிலம் சிக்கிம் என ஏற்பட வழிவகுத்ததன் மூலம் அவருக்கு நிலையான வளர்ச்சி தலைமை விருது (sustainable development leadership award) 2016 வழங்கப்பட்டது.
அவரது பங்களிப்பு பற்றி:
சாம்லிங் முன்முயற்சியில், ஒரு வரலாற்று அறிவிப்புமிக்க ஒரு மொத்த ஆர்கானிக் மாநிலமாக சிக்கிம் -யை மாற்றும் தீர்மானம் 24, பெப்ரவரி 2003 ல் சிக்கிம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மாநில அரசு வகை வாரியான கரிம வேளாண்மை திட்டங்கள் மற்றும் கரிம செயல் திட்டங்களின் மூலம் மாற்றத்தின் இலக்குகளை நிர்ணயிக்க உருவாக்கியுள்ளது.
அவர்கள் மருத்துவ தாவரங்கலின் சேகரிப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்ட மரம் இல்லாத காட்டுப் பொருட்களை முழுமையாக தடை விதித்து உள்ளனர். மேலும் பத்து மரக்கன்றுகளை கட்டாய நடவு என சட்டபூர்வ விதிகள் விதிக்கப்பட்டது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Oct.07, 2016 (07/10/2016)"