fbpx
  • No products in the basket.

9.5. திரு.வி.க.

வாழ்க்கைக்குறிப்பு:

திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)

பெற்றோர் : விருதச்சலனார் – சின்னம்மையார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.

இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.


சிறப்பு பெயர்கள்:

· தமிழ்த்தென்றல்

· தமிழ் முனிவர்

· தமிழ் பெரியார்

· தமிழ்ச்சோலை

· தமிழ் புதிய உரைநடையின் தந்தை

· தமிழ் மேடைப்பேச்சின் தந்தை

· தொழிலாளர் தந்தை

· பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)

· இக்காலத் தமிழ்மொழி நடையாளர்

· தமிழ் வாழ்வினர்


கற்றல்:

· தமிழ் கற்றது : யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்

· சித்தாந்த சாத்திரம் கற்றது :மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்

· இலக்கியம் கற்றது : மறைமலை அடிகளிடம்

· சமய அறிவு பெற்றது : பாம்பன் சுவாமிகளிடம்


உரைநடை நூல்கள்:

· முருகன் அல்லது அழகு

· தமிழ்ச்சோலை

· உள்ளொளி

· மேடைத்தமிழ்

· சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து

· மனித வாழ்கையும் காந்தியடிகளும்

· பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்

· தமிழ்த் தென்றல்

· சைவத்திறவு

· இந்தியாவும் விடுதலையும்

· சைவத்தின் சமரசம்

· கடவுட் காட்சியும் தாயுமானவரும்

· நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்

· இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

· தமிழ் நூல்களில் பௌத்தம்

· காதலா? முடியா?சீர்திருத்தமா?

· என் கடன் பணி செய்து கிடப்பதே

· இமயமலை அல்லது தியானம்

· இளமை விருந்து

· பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்

· வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்


செய்யுள்:

· முருகன் அருள் வேட்டல்

· கிறித்துவின் அருள் வேட்டல்

· உரிமை வேட்கை

· திருமால் அருள் வேட்டல்

· சிவன் அருள் வேட்டல்

· புதுமை வேட்டல்

· பொதுமை வேட்டல்

· அருகன் அருகே

· கிறித்து மொழிக்குறள்

· இருளில் ஒளி

· இருமையும் ஒருமையும்

· முதுமை உளறல்


பயண நூல்:

· எனது இலங்கை செலவு


இதழ்:

· நவசக்தி

· தேசபக்தன்


குறிப்பு:

· பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்

· திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்

· சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்

· இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது

· இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது

· இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது

· இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது


சிறப்பு:

· இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்

· திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்

· அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்

· பி.ஸ்ரீ.ஆச்சார்யா பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்

· “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை பயன்படுத்தியவர்

· எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே

· திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் மு.வ, கல்கி

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image