fbpx
  • No products in the basket.

17.2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

· புதுக்கோட்டையில் நாராயணசாமி, சந்திரம்மாள் என்பவர்களுக்கு 30-07-1886-ல் மகளாகப் பிறந்தார்.

· 6ம் வகுப்புடன் படிப்பு நின்ற நிலையில் தனது ஆசிரியர் பாலையா என்பவரின் முயற்சியால் பயின்று கல்லூரி முன்னிலையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

· புதுக்கோட்டை மன்னரின் தனி ஆணையின் பேரில் கல்லூரியில் சேர்ந்து திரைமறைவுப்பாடம் கற்றார்.

· தன் தந்தையின் மாணவரான சீனிவாச ராவ் என்பரின் உதவியுடன், புதுக்கோட்டை மன்னரின் உதவிப் பணத்துடன் மருத்துவப் படிப்பில் 1907-ல் சேர்ந்தார்.

· 1912-ல் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.

· 1913-ல் முதல் பெண் மருத்துவமனைப் பணி மருத்துவராகப் பயிற்சி முடித்தார்.

· 1914-ல் டாக்டர் சுந்தரரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது வாரிசுகளுக்கு இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி எனப் பெயரிட்டார்.

· தனது சகோதரி புற்றுநோயால் இறக்கவே அது பற்றி இவரது நோக்கம் செல்லலானது.

· 1925-ல் இந்திய அரசின் உதவியுடன் இலண்டன் ‘செல்சியா’ மருத்துவமனையில் தாய் சேய் மருத்துவப் பயிற்சி பெற்றார். அத்தோடு ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்தார்.

· பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்திய மகளிர் கழகத்தின் சார்பில் கலந்து கொண்ட இவர் குழந்தைத் திருமணம், விதவை மணம் பற்றி சொற்பொழிவாற்றினார்.

· 1926-ல் பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் எனச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் தமிழக ஆளுநர் இவரை சட்டமேலவை உறுப்பினராக்கினார். சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும் ஆனார்.

· 1926-1930 வரை பணியாற்றிய இவரே சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினர் ஆவார்.

· தேவதாசி முறையை ஒழிக்க அதிகம் பாடுபட்டார். பல்வேறு வகையில் எதிர்ப்பு இருந்த போதும் தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டும் 1927-ல் சென்னைக்கு வந்த காந்தியின் ஆதரவுடன் சட்டம் இயற்றவும் இவர் காரணமானார்.

· புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கல்வித்துறை இயக்குநர், அரசரின் ஆலோசகர், அரசர் கல்லூரி முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.

· மீட்கப்பட்ட தேவதாசிப் பெண்களை காப்பகத்தில் சேர்க்கச் சென்ற போது மறுக்கப்படவே, தாமாக 1930ல் அவ்வைஇல்லத்தைத் தொடங்கினார்.

· மேலும் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்தியை கைது செய்ததை எதிர்த்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், துணைத்தலைவர் பதவியையும் துறந்தார்.

· 1954–1957 வரை தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

· 1956-ல் இந்திய அரசால் இவருக்கு “பத்மபூசன்” விருது வழங்கப்பட்டது.

· 22-07-1968-ல் தனது அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலேயே இன்னுயிர் நீத்தார்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image