fbpx
  • No products in the basket.

10.10. உமறுப்புலவர்

· சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார். காலம் கி.பி.17ம் நூற்றாண்டு.

· எட்டையபுரத்து அரசவைக் கவிஞர் கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் கற்றார்.

· தனது 16-ம் வயதிலேயே செருக்குமிக்க வடநாட்டுப்புலவன் ‘வாலை வாரிதி’ என்பவனுடன் வாதிட்டு வென்று தன் ஆசிரியருக்குப் பின் எட்டயபுரத்து சமஸ்தானப் புலவரானார்.

· வள்ளல் சீதக்காதியால் ஆதரிக்கப்பட்டவர். அவரின் வேண்டுகோளுக்கு இனங்க சீறாப்புராணத்தைப் பாடியுள்ளார்.

· இவரது நூல் “நெஞ்சையள்ளும் சீறா” எனப் போற்றப்படுகிறது.

· சீறாப்புராணம் சீதக்காதி வள்ளலின் இறப்புக்குப் பிறகு அவரது நண்பர் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

· நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற படலங்களில் அவரது கற்பனைத்திறன் வருணனை அழகு முதலியன புலப்படுகின்றது.

· நபிகள் நாயகத்தின் தீர்க்க தரிசனம், பிறப்பு, நபிப்பட்டம், அவரது இன்னல்கள், தீன் நெறி வளர்த்தது, மக்கா விட்டு மதினா வந்தது முதலிய செய்திகளை இதயம் களிக்கும் வண்ணம் படைத்துள்ளார்.

· இவரது பாடல்களில் அரபுச் சொற்களும், பெயர்களும் பரவிக் கிடக்கின்றன.

· சீறாப்புராணத்தின் மூன்றாவது காண்டம் முற்றுப் பெறாமல் இருக்க, காயல் பட்டிணம் அஹமது மரைக்காயர் 1732-ல் அது முற்றுப்பெற பாடல்களைப் பாடினார்.

· அப்பாடல்களே “சின்ன சீறா” என்று அழைக்கப்படுகிறது.

· இந்நூல் 39 படலங்கள், 1829 விருத்தங்களையும் உடையது.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image