fbpx
  • No products in the basket.

1.4. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

இயற்பெயர் : தேசிய விநாயகம்

பெற்றோர் : சிவதானுப்பிள்ளை - ஆதிலெட்சுமி

பிறந்த ஊர் : தேரூர், கன்னியாகுமரி

ஆசிரியர் பெயர் : சாந்தலிங்கத் தம்பிரான்

பணி : பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பின் கல்லூரிப் பேராசிரியர் ஆனவர்

காலம் : 27.08.1876 - 26.09.1954


சிறப்புப் பெயர்

· கவிமலை

· முதல் குழந்தைக் கவிஞர்

· கவிக்கோ மகள்

· தேவி

· எங்கள் தேவி


இதழ்கள்

· இவர் கவிதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்ட இதழ்கள் - தமிழன், கேரளா சொசைட்டி

· சென்னையில் வெளிவந்த திராவிடன் என்ற இதழில் இவர் எழுதிய மனோன்மணியம் வெளிவந்தது


பிற செய்திகள்

· 1940 யில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கதில் தமிழ்வேள் உமா மகேசுவரனார் கவிமணிக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்

· உமர்கய்யாம் பாடல்களை (ரூபாயத்) தமிழில் மொழிபெயர்த்தார்.

· ரூபாயத் என்பது பாரசீக மொழிச்சொல் : பொருள் - 'நான்கடி கொண்ட செய்யுள்'

· புத்தரின் வரலாற்றை ஆங்கில மொழியில் இருந்து ஆசிய ஜோதி என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்

· இலக்கிய மேடையில் முதன்முதலில் பொன்னாடை பெற்ற சான்றோர் - கவிமணி


புகழுரைகள் :

· "தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை - தினமும்

கேட்பது என் செவிப் பெருமை" - நாமக்கல் கவிஞர்

· "கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை

படிக்கத்தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை" - டி.கே.சண்முகம்

· "பாரதியார் பாக்களில் புயல் வீசுகின்றது. பிள்ளையவர்களின் பாக்களில் தென்றல் தவழுகின்றது என்று தாய்நாடு

என்ற சஞ்சிகையில் பாராட்டிக் கட்டுரை எழுதியவர்” - தமிழ்ப் பேராசிரியர் ரம்போலா


படைப்புகள்:

· அழகம்மை ஆசிரியர் விருத்தம் (கவிமணியின் முதல் நூல்)

· மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)

· குழந்தைச் செல்வம்

· காந்தளூர்ச் சாலை (கவிமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்)

· தேவியின் கீர்த்தனங்கள் - 1956 யில் பரிசு பெற்ற நூல் (சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார்)

· முதலியார் ஓலை (ஆராய்ச்சி நூல் கேரளா சொசைட்டி இதழில் வெளியிட்டார்)


மேற்கோள்கள்:

· உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்ப

ஊற்றெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து சொல்வது கவிதை

· மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா

· தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

· பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்

பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image